அரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா?
ஏப்ரல் 27,2008,00:00 IST
ஆமாம் உண்டு
. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இதை நடத்துகிறது. இதில் தகுதி பெற்றால் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள்/அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,எம்.டெக்., எம்.ஆர்க். போன்ற படிப்புகளில் உங்கள் தகுதிக்கேற்ப சேர முடியும். வேறு சில தனியார் பல்கலைக்கழகங்களும் சுய நிதிக் கல்லூரிகளும் கூட இதை ஏற்றுக் கொள்கின்றன. தகுதி தரும் படிப்பில் தற்போது இறுதியாண்டு படிப்பவரும் கூட விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது மே 17 மற்றும் 18 தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
டான்செட் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சி பிசப் ஹீபர் கல்லூரி, திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் நடத்தப்படும். ஆன்லைனில் www.annauniv.edu/tancet2008 தளத்தில் இதற்குப் பதிவு செய்யலாம். ரூ.300 பணமாகச் செலுத்தி விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் பெறலாம். டிடியாக ரூ.350 அனுப்பி அண்ணா பல்கலைகழகத்திலிருந்து தபால் மூலமாகப் பெறலாம்.
சுரங்கத் துறையில் பி
.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்?
தான்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் சுரங்கத் துறையில் பி
.எச்டி. செய்யலாம். எரிபொருள், சுரங்கம், மினரல், பெட்ரோலியம், மைனிங் மெசினரி என அரிய துறைகளில் பி.எச்டியை மேற்கொள்ளும் வாய்ப்பை இப் பல்கலைக்கழகம் தருகிறத. 2008ம் ஆண்டிற்கான படிப்புகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. உதவித் தொகையோடு கூடிய ஆய்வுப் படிப்புகள் இவை.
இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன்
2008ல் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. முழு விபரங்களைப் பெற http://www.ismdhanbad.ac.in
என்னும் தளத்தைப் பார்வையிடுங்கள்.